Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ... விருதுநகர் மாரியம்மன் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்! விருதுநகர் மாரியம்மன் கோயில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏப்., 3ல் கபாலீஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஏப்., 3ல் கபாலீஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 மார்
2016
11:03

சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், 12 கால யாகசாலை பூஜையுடன், ஏப்., 3ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் காவேரி கூறியதாவது: கடந்த செப்., மாதம், கிழக்கு ராஜகோபுரம், மேற்கு கோபுரம் மற்றும் 15 சன்னிதி விமானங்களுக்கு முதற்கட்டமாக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கப்பட்டன. கோபுரங்கள், வாகனங்கள், கோவில் குளம், கோவில் வளாகம் உள்ளிட்டவை, ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்றன. சன்னிதிகளுக்கான பாலாலயம் வரும், 29ம் தேதி நடக்க உள்ளது. அனைத்து திருப்பணிகளும் நிறைவடைந்ததும், வரும், ஏப்., 3ம் தேதி காலை, 8:30 முதல், 9:50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

கும்பாபிஷேகத்தை காண ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, பாதுகாப்பு, மருத்துவ உதவி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படும்.அதேபோல், வரும், 28ம் தேதி முதல் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக தீயணைப்பு நிலையமும் அமைக்கப்படும். கும்பாபிஷேகம், தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கும்பாபிஷேகம் நடக்க உள்ளதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பிரம்மாண்டமாக யாக சாலை போடப்பட்டுள்ளது.

பூஜைகள் துவக்கம்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் லக்ன பத்திரிகை வாசிப்புடன் பூஜைகள் துவங்கின. நேற்று காலை கணபதி பூஜை நடந்தது. நாளை இரவு முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. ஏப்., 2ம் தேதி அஷ்டபந்தன மருந்து சாத்துதல், ஏப்., 3ம் தேதி காலை, 7:45 மணிக்கு கலசங்கள் புறப்பட்டு, காலை, 8:30 முதல், 9:50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: அயோத்தி கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
 ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar