Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., மாரியம்மன் கோயிலில் ... பங்குனி அமாவாசை:  அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்! பங்குனி அமாவாசை: அக்னி தீர்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
12ம் நூற்றாண்டில் சிதம்பரம் மடத்திற்கு உஞ்சனை பகுதியிலிருந்து படித்தளம்!
எழுத்தின் அளவு:
12ம் நூற்றாண்டில் சிதம்பரம் மடத்திற்கு உஞ்சனை பகுதியிலிருந்து படித்தளம்!

பதிவு செய்த நாள்

08 ஏப்
2016
11:04

தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள உஞ்சனை ஸ்ரீசவுந்திரநாயகி சமேதஸ்ரீ திருபுவன சக்கரவர்த்தீஸ்வரர் கோயில் 12 ம் நுாற்றாண்டிற்கு முன் கட்டப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லுாரி பேராசிரியர் கணேசன்,ஆசிரியர்கள், மாணவர்கள் குழு, தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சித்துறை முன்னாள் துணை இயக்குனர் சாந்தலிங்கம் தலைமையில் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களை கடந்த 5 தினங்களாக ஆய்வு செய்து வருகின்றனர். கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ளது பற்றி முன்னாள் துணை இயக்குனர் சாந்தலிங்கம் கூறியதாவது, 12ம் நுாற்றாண்டில் சுந்தரபாண்டியன் காலத்தில் எழுதப்பட்டவையாக உள்ளன. பெரும்பாலும் நிலத்தானம், படித்தளம் சம்பந்தமாகவே உள்ளது. தற்போது உஞ்சனை என்று அழைக்கப்படும் இந்த கிராமம் அந்த காலத்தில் உஞ்சேனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு கல்வெட்டில் கேரள சிங்க வளநாட்டு பெரும்பூர் நாட்டு ஊஞ்சேனை உடையார் தானத்தார்வ மாளவ சக்கரவர்த்தி ஈஸ்வர முடையார் நாயனார் கோயில் பிடிபாட பரிசு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டுக்கள் பற்றி 1980-81ல் மத்திய அரசு ஆய்வில் சில குறிப்புக்களை மட்டும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளது. அந்த காலத்தில் தாலுகா அலுவலகம்,கருவூலம் போல் கோயில்கள் செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது, என தெரிவித்தார்.

பேராசிரியர் கணேசன் கூறுகையில், உஞ்சனையை தொடர்ந்து கண்டதேவி, அரியக்குடி கோயில்களில் உள்ள கல்வெட்டுக்கள் பற்றி ஆய்வு செய்ய உள்ளோம். அனைத்து செய்திகளையும் ஆய்வு செய்து கட்டுரை சமர்பித்து, எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் புத்தகமாக வெளியிடவுள்ளோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar