பதிவு செய்த நாள்
08
ஏப்
2016
11:04
பண்ருட்டி: திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நேற்று அருள்பாலித்தார். காலை 6:00 மணிக்கு, சுப்ரபாதம், 6:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு, நித்யபடி பூஜை நடந்தது. ராமநவமியை முன்னிட்டு, மூலவர் பெருமாள் ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன், பரதன், சத்ருகன், அனுமனுடன் அருள்பாலித்தார். காலை 9:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்திலும்; 10:00 மணிக்கு, மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு, உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு, உச்சிகால பூஜையும், மாலை 4:00 மணிக்கு, நடை திறப்பு, மாலை 5:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.