கோத்தகிரி மாரியம்மன் திருவிழா தேவராட்டம் அமர்க்களம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2016 11:04
கோத்தகிரி: கோத்தகிரி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, அம்மனை அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. கோத்தகிரி கடைவீதியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் திருவிழா,13ல் தொடங்கி நடந்துவருகிறது. நேற்று நடந்த விழாவில், அம்மனுக்கு அபிஷேக மலர் வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் இருந்து, தேவராட்டத்துடன், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடத்தது. மாலையில், அம்மன் புலி வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.