திருப்பூர்: ராயபுரம் சின்னான் நகர் மாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், நேற்று பூச்சாட்டுதல், கருப்பண்ணன் கோவிலில் இருந்து அம்மன் அழைத்து வருதல் மற்றும் பக்தர்கள் அலகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பறவை காவடி, கொக்கி, கத்தி ஆகியவற்றை உடலில் குத்தி வந்தனர். இன்று, உருவாரம் அழைத்து வருதல், சப்பரம், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சிகள்; நாளை, வேடமிடுதல் மற்றும் அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.