Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி லட்டில் பூரான் பக்தர்கள் ... ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா: அசுத்தம் நிறைந்த தெப்பத்தால் வேதனை! ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி வரும் பக்தர்களே உஷார்: வசூல் வேட்டையில் புரோக்கர்கள்!
எழுத்தின் அளவு:
பழநி வரும் பக்தர்களே உஷார்: வசூல் வேட்டையில் புரோக்கர்கள்!

பதிவு செய்த நாள்

11 மே
2016
10:05

பழநி: பழநிஅடிவாரம் தனியார் தங்கும் விடுதியை சேர்ந்த சில புரோக்கர் கள் சுற்றுலாவரும் வாகனங்களை விரட்டிபிடித்து வசூல் வேட்டை நடத்துகின்றனர். தமிழகத்தின் முதன்மை ஆன்மிக தலமான பழநிகோயிலுக்கு கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக அங்கு தங்குவதற்கு விடுதிகள் கிடைப்பது அரிதாகியுள்ளது. வாடகையும் உயர்ந்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சில தனியார் தங்கும் விடுதியை சேர்ந்த புரோக்கர்கள் பழநி கோயில், கொடைக்கானலுக்கு வருவோரை மறிக்கின்றனர்.

பழநி வரும் வாகனங்களை அடிவாரம் நுழைவுப்பகுதியிலேயே வழிமறித்து பேரம் பேசுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நிற்காத வாகனங்களை இருசக்கரவாகனத்தில் துாரத்திசெல்கின்றனர். அவர்கள் நிறுத்தும் இடத்தில் பயணிகளிடம் தங்களது விடுதியில் குறைந்த வாடகையில், நிறைய வசதிகளுடன் அறைகள் உள்ளது என ஆசைவார்த்தை கூறி அழைப்பு விடுக்கின்றனர். இதனை நம்பி செல்வோரிடம் வழக்கமாக வசூல் செய்யும் தொகையைவிட இரு மடங்கு கூடுதலாக வசூல் வேட்டை நடத்துகின்றனர். இதனால் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் பணத்தை செலவழித்தும் போதிய வசதிகள் இல்லாமல் சிரமப் படுகின்றனர். இதுதொடர்பாக பக்தர்கள், சுற்றுலா பயணிகள் புகார் அளிக்க முன்வராத காரணத்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பது இல்லை. ஆகையால் பழநி வரும் பக்தர்கள், பயணிகள் தனியார் விடுதி புரோக்கர்களிடம் ஏமாறாமல், நேரடியாக லாட்ஜ், விடுதிக்கு சென்று தங்கினால், பணத்தை பாதுகாக்கலாம். இல்லையெனில் ஏராளமாக இழக்க வேண்டியிருக்கும். பயணிகள்தான் உஷாராக இருக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 ல் துவங்குகிறது. 27ல் சூரசம்ஹாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 ... மேலும்
 
temple news
சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று புரட்டாசி வியாழனை ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar