தங்க ரிஷப வாகனத்தில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் வீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2016 10:05
காரைக்கால்: திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்ச விழாவில், தங்க ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி துவங்கியது. தினந்தோறும் விநாயகர், சுப்ரமணியர், அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கு உற்சவம் வீதியுலா நடந்தது. பிரம்மோற்சவ விழா வில் நேற்று முன்தினம் இரவு, நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில் தங்க ரிஷப வாகனத்தில் முக்கிய வீதிகளில் சாமி வீதி உலா நடந்தது. விழாவின் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 5.40 மணிக்கு 5 தேர் திருவிழா நடைபெறுகிறது. வரும் 19ம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் செய்து வருகின்றனர்.