Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடாபிஷேகம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுமுகை அருகே கத்தி போடும் விழா: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
சிறுமுகை அருகே கத்தி போடும் விழா: பக்தர்கள் பரவசம்!

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2016
11:06

மேட்டுப்பாளையம்: புதிதாக திருப்பணி செய்த ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், கத்தி போடும் விழா நடந்தது. சிறுமுகை அருகேவுள்ள பகத்துாரில், 200 ஆண்டுகள் பழமையான ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலும், அகோர வீரபத்திரசுவாமி கோவிலும் உள்ளது. இக்கோவில் கட்டி, 36 ஆண்டுகள் ஆனதால், சீரமைத்து திருப்பணிகள் செய்து, புதிதாக விநாயகர் கோவில் கட்டினர். இதன் கும்பாபிஷேக விழா கடந்த, 6ம் தேதி மகா கணபதி மற்றும் கோமாதா பூஜையுடன் துவங்கியது. தீர்த்தக்கலசங்கள், முளைப்பாரிகள், கோபுர கலசங்கள், புற்றுமண் ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இரவு கிராம சாந்தியும், முதல் கால ஹோம பூஜையும் துவங்கியது. 7ம் தேதி இரண்டாம்கால ஹோமமும், விக்ரஹங்களுக்கு அபிஷேகமும், கோபுர கலசமும் அமைத்து, மூன்றாம் கால ஹோமம் பூஜையும் நடந்தது. புதன்கிழமை காலை நான்காம் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, கோபுர கலசங்கள் மீதும், சுவாமி மீதும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு அலங்கார பூஜையும், மாவிளக்கு பூஜையும் செய்தனர். நேற்று பவானி ஆற்றிலிருந்து அம்மனை அழைத்து வந்தனர். அப்போது, ஏராளமான இளைஞர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இன்று, அம்மன் திருவீதி உலாவும், நாளை இரவு, 9:00 மணிக்கு இரணியன் தெருக்கூத்தும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar