Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமுறை ரத்தினம் பட்டம் வழங்கும் ... ரமலான் சிந்தனைகள்- 4: உழைப்பே உயர்வு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேசிய வழிபாட்டு மையமாக மாறுமா சபரிமலை?
எழுத்தின் அளவு:
தேசிய வழிபாட்டு மையமாக மாறுமா சபரிமலை?

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2016
12:06

சபரிமலை: சபரிமலையை தேசிய வழிபாட்டு மையமாக மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பம்பையை துாய்மையாக பராமரிக்க 1000 கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய உயர் மட்ட குழுவினர் கேரள முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.சபரிமலையை தேசிய வழிபாட்டு மையமாக மாற்றுவதற்காக கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இவ்வாறு அறிவிப்பதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு தலங்களை தேசிய வழிபாட்டு மையமாக அறிவிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழிபாட்டு மையங்களை இணைத்து சுற்றுலா திட்டம் தயாரிக்கும் போது அதில் சபரிமலையை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் பம்பையை துாய்மைாக பராமரிக்க மத்திய அரசு கங்கை ஆக்ஷன் பிளான் மாடலில் 1000 கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது. மண்டல மகரவிளக்கு காலத்தில் பம்பையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பது, பக்தர்களுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்க குன்னாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவது, கழிவு நீர் பம்பையில் சேர்வதை தடுப்பது, பம்பையிலும் சன்னிதானத்திலும் தேவையான அளவு கழிப்பறைகள் கட்டுவது, பம்பையில் துணிகள் வீசுவதை தடுப்பது போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள். இதற்காக மத்திய நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் ஜெ.சி.அய்யர் தலைமையில் ஐந்து பேர் குழுவினர் பம்பை ஆறு பாயும் இடங்களை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினறாயி விஜயன் மற்றும் மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மண்டல மகர விளக்கு காலத்தில் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பணிகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஆலோசனை தெரிவித்தார். 15 நாட்களுக்குள் வரைவு அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மத்திய குழுவினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar