Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுதர்ஸனர் வழிபாடுள்ள தலங்கள்! சங்கடங்கள் நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! சங்கடங்கள் நீக்கும் சங்கடஹர ...
முதல் பக்கம் » துளிகள்
கலியுகம் எப்படி இருக்கும்?
எழுத்தின் அளவு:
கலியுகம் எப்படி இருக்கும்?

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2016
05:06

ஒருமுறை பகவான் கிருஷ்ணரிடம் பாண்டவர்களில் நால்வரான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர், கலியுகம் எப்படி இருக்கும்? என்று தங்கள் சந்தேகத்தைக் கேட்டனர். அதற்கு மாதவன், சொல்வதென்ன? எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன் என்று கூறி, நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தி, அவற்றை எடுத்துக் கொண்டு வருமாறு ஆணையிட்டார். கோவிந்தனின் ஆணைப்படி நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர். முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணறு மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அர்ஜுனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான குரலைக் கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பிப் பார்த்த அர்ஜுனன் ஒரு கோரமான காட்சியைக் கண்டான். அங்கு அந்தக் குயில் ஒரு வெண்முயலை கொத்தித் தின்றுகொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்துக் கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ணி குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான். சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சியைக் கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுக்குட்டியை ஈன்றெடுத்து, அதனைத் தன் நாவால் வருடி சுத்தம் செய்துகொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய்ப் பசு வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அந்தக் கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்? என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி அடைந்தான்.

நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுத்துக்கொண்டு திரும்பினான். மலைமேல் இருந்து, பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருந்த அனைத்து மரங்களையும், தடைகளையும் இடித்துத் தள்ளி, வேகமாய் உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்தப் பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சரியத்தோடு அதைக் கண்ட நகுலன் தெளிவுபெற பகவானை நோக்கிப் புறப்பட்டான். இவ்வாறு பாண்டவர்களுள் நால்வர் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும் ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கேட்டனர். கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார். அர்ஜுனா, கலியுகத்தில் போலி மதகுருக்கள், ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாகப் பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள் - குயிலைப் போல!

பீமா, கலியுகத்தில் செல்வந்தர்களிடையே ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் செல்வம் வழிந்தாலும், அதில் ஒரு சிறு பகுதியைக் கூட ஏழைகளுக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள். ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வந்தர்கள் ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள்- வற்றிய கிணற்றுக்கு அருகே உள்ள நிரம்பி வழியும் கிணறுகளைப் போல்! சகாதேவா, கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதுள்ள கண்மூடித்தனமான பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள் பசுவைப்போல்!

நகுலா, கலியுகத்தில் மக்கள் சான்றோர்களின் நற்சொற்களைப் பேணாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும் நற்குணத்தினின்றும் நீங்குவர்கள். யார் நன்மைகளை எடுத்துக் கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்து நிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும் - பாறையைத் தடுத்த சிறுசெடியைப் போல் என்று சொல்லி முடித்தார்.

 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி பொம்மவாராவில் சுந்தரேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் பழமையான ஆன்மிக ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடாவின் பன்ட்வால் தாலுகா, கரிஞ்சா கிராமத்தில் மலை உச்சியில் கரிஞ்சேஸ்வரா கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ராம்நகர் மாவட்டம், பிடதியின் ஜதேனஹள்ளியில் அமைந்துள்ளது ஸ்ரீ வரதராஜேஸ்வரா சிவன் கோவில். இப்பகுதியில் ... மேலும்
 
temple news
பல கோவில்களுக்கு சென்று, தரிசனம் செய்திருந்தாலும், சில கோவில்களின் கட்டட அமைப்பு, நம் மனதில் அழியாமல் ... மேலும்
 
temple news
சிவன் தன் தலையின் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar