நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் இன்று மாலை தீமிதி திருவிழா நடக்கிறது. தீ மிதி விழா கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 23ம் தேதி முதல் தினமும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், சிறப்பு அலங்காராத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான இன்று (1ம் தேதி) மாலை தீமிதி திருவிழா நடக்கிறது. பூஜைகளை ஞானசேகரன், கணேஷ் பூசாரிகள் செய்து வரு கின்றனர்.