Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்- 26: இருப்பதை ... ஜெனகை மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு ஜெனகை மாரியம்மன் கோயில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அதிகார போட்டியால் முடங்கியது ராமேஸ்வரம் மங்கல தீர்த்த பூங்கா!
எழுத்தின் அளவு:
அதிகார போட்டியால் முடங்கியது ராமேஸ்வரம் மங்கல தீர்த்த பூங்கா!

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2016
11:07

ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் கோயில் நிர்வாகத்தினரின் அதிகார போட்டியால் மங்கல தீர்த்தம் பூங்கா பராமரிப்பின்றி முடங்கி உள்ளது. பூங்காவில் உள்ள மரக் கன்றுகள், செடிகள் தண்ணீரின்றி கருகிவருகிறது. ராமேஸ்வரம் - தங்கச்சிமடம் ஊராட்சிகுட்பட்ட மங்கல தீர்த்த குளத்தில் நீராடினால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். இதனால் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் தீர்த்த குளத்தில் நீராடுவது வழக்கம். பக்தர்கள் பொழுதுபோக்க வசதியாக தீர்த்த குளத்தின் அருகில் கோயிலுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் இடத்தில் பூங்கா அமைக்க முந்தைய கலெக்டர் நந்தகுமார் முடிவு செய்தார். இதற்காக வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து பூங்கா பகுதிக்குள் பழமர கன்றுகள், பூ செடிகள், மூலிகை செடிகள், கிரகண செடிகள் நடப்பட்டது. இதனை பசுமை பூங்காவாக மாற்றி தங்கச்சி மடம் ஊராட்சி பராமரித்து வந்தது. இந்நிலையில் கோயில் இடத்தில் அமைத்த பூங்காவை பிறர் பராமரிக்கவோ, மக்களிடம் கட்டணம் வசூலிக்கவோ அனுமதிக்க முடியாது.

பூங்காவை நாங்களே பராமரிப்போம் என, கோயில் நிர்வாகம் போர்கொடி துாக்கியது. இதனால் பூங்கா பராமரிப்பதை பஞ்சாயத்து நிர்வாகம் கைவிட்டது. இதனால் பூங்கா பொலிவிழந்து முடங்கி உள்ளதோடு, அங்குள்ள மரம், செடிகள் தண்ணீரின்றி கருகி வருகிறது. இதுகுறித்து தங்கச்சிமடம் ஊராட்சி தலைவர் ஞானசீலன் கூறியதாவது:மாவட்ட கலெக்டர் நிதியில் அமைத்த பூங்காவில் மரக் கன்றுகள், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவை பராமரிக்க ஊராட்சி சார்பில் நுாறு நாள் வேலை திட்ட ஊழியர்கள் நியமிக்கபட்டுள்ளனர். கோயில் நிர்வாகம் அனுமதித்தால் மங்கல தீர்த்தம் பூங்கா ராமேஸ்வரம் தீவின் பசுமை பூங்கா வாக உருவாக்குவோம்,” என்றார். இதுகுறித்து கலெக்டர் நடராஜன் கூறியதாவது: பூங்கா அமைந்துள்ள இடம் கோயிலுக்கு சொந்தமானது. அங்கு மரக் கன்றுகள், மூலிகை செடிகள் பராமரிக்க ஊராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம் கோருகிறது. இதுகுறித்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி விரைவில் முடிவு எட்டப்படும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar