பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 4ம் தேதி மூலவர் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். அமாவாசையையொட்டி, அன்று காலை 6:30 மணிக்கு விஸ்வரூபம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.