திருப்பதி : திருமலை ஏழுமலையானை, ஜூன் முழுவதும், 25 லட்சம் பக்தர்கள், தரிசித்தனர்; 94 லட்சம் லட்டுகள் விற்பனையாகின. 12 லட்சம் பக்தர்கள், தலைமுடி காணிக்கை செலுத்தினர்; உண்டியல் காணிக்கை மூலம், 89 கோடி வருமானம் கிடைத்துள்ளது. வாரந்தோறும் புதன்கிழமை, டாலர் விலையை நிர்ணயிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பக்தர்கள், இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய வசதியாக, செப்., 31 வரைக்குமான, ஒரு லட்சம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.