Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரமணர் தந்த பைரவர் பிரசாதம்! அண்டை வீட்டாருக்கு நல்லதைக் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சுமையைக் கண்டு துவண்டு போகாதே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2016
12:07

*இளைஞனே! தன்னம்பிக்கை ஒன்றே உன் பரம்பரைச் சொத்து என்பதை மறவாதே. உன்னை சுமக்கும் பூமி கூட உன் காலடியில் தான் இருக்கிறது. தன்னம்பிக்கையோடு கடவுள் நம்பிக்கையும் இணைந்து விட்டால் உன் வாழ்வு ஒளி மிகுந்ததாகி விடும்
*விதியை நிர்ணயிக்கும் சக்தியும், அதற்கு தேவையான ஆற்றலும், உறுதியும் உன்னிடம் நிறைந்திருக்கிறது.
*நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறி விடுவாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாக ஆகி விடுவாய்.
*உலகம் மிகப் பெரிய பயிற்சிக்கூடம். இங்கு நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே மண்ணில் பிறவியெடுத்து வந்திருக்கிறோம்.
*துருப்பிடித்து தேய்வதை விட உழைத்து தேய்வது மேலானது. நல்ல வழியில் பணம் சம்பாதிப்பதும் அதை சமுதாயத்திற்கு பயனுள்ள விதத்தில் செலவழிப்பதுமே சிறந்த வழிபாடு.
*பிறருடைய பாராட்டு, பழிச்சொல் பற்றி நீ யோசிக்க ஆரம்பித்தால் உன்னால் மகத்தான செயல் எதையும் சாதிக்க முடியாது.
*இரக்கமுள்ள இதயம், சிந்தனை மிக்க மூளை, உழைக்க துடிக்கும் கைகள் இவை மூன்று மட்டுமே இன்று நாம் முன்னேறுவதற்கு அவசியமானவை.
*இயற்கையை வெல்லவே நீ இந்த உலகில் பிறந்திருக்கிறாய். அதற்குப் பணிந்து போவதற்கு அல்ல.
*உடல், மனம் இரண்டையும் பலவீனப்படுத்தும் எதையும் கனவிலும் நெருங்காதே. சோம்பேறித்தனத்தை எப்பாடுபட்டாவது துரத்திவிடு. சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்றே பொருள்.
*எண்ணம், செயல் இரண்டிலும் குறுக்கிடும் தீமைகளுடன் ஓயாமல் போரிட்டுக் கொண்டேயிரு. இதில் வெற்றி பெற்று விட்டால் அமைதி உன்னைத் தேடி வரும்.
*அனைவரும் கடவுளின் அன்பு குழந்தைகள். எதையும் சாதிக்கக் கூடிய வலிமையும், மன உறுதியும் நம் மனதிற்குள் குடிகொண்டிருக்கிறது.
*ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும். அதை அடைவதற்கு முடிந்த வரை சிறப்பான வகையில் முயற்சிக்க வேண்டும்.
*மற்றவர்கள் ஏளனம் செய்வதை சிறிதும் பொருட்படுத்தாதே. கடமைகளைச் செய்வதில் கண்ணாக இரு. சுய கட்டுப்பாடு ஒன்றே லட்சியத்தை அடைய உனக்குப் பேருதவியாக இருக்கும்.
*மனிதனை உருவாக்குவதில் இன்பமும், துன்பமும் சரி சமமான இடம் வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே சிறந்த ஆசிரியராக மனிதனுக்கு வழி காட்டுகிறது.
*‘என்னால் எல்லாம் முடியும்’ என்று முழுமையாக ஒருவன் நம்பினால், அனைத்தையும் சாதித்துக்காட்டும் வல்லமையை அவன் பெறுவது திண்ணம்.
*மனதை ஒருமுகப்படுத்தக் கற்றுக் கொள். தன்னை மறந்து மன ஒருமைப்பாட்டுடன் பணி செய்யும் போது மனிதன் அழியாப்புகழை அடைகிறான்.

மகான் விவேகானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar