பதிவு செய்த நாள்
05
ஜூலை
2016
11:07
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் மூலவர், தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், மாதம்தோறும் அமாவாசையன்று, மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து வ ருகிறார். ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, மூலவர், தன்வந்திரி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நேற்று அருள்பாலித்தார். காலை 6:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு, நித்யபடி பூஜை, காலை 9:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 12:30 மணிக்கு, உச்சிக்கால பூஜை, மாலை 4:00 மணிக்கு, நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு, நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு, ஏகாந்த சேவை நடந்தது. அனைத்து பிணிகளையும் தீர்க்கக்கூடிய மூலிகை லேகியம், பூஜை செய்ய ப்பட்டு, அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.