பழநி கோயிலில் ஆனித்திரு மஞ்சன விழா: நடராஜருக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2016 11:07
பழநி: பழநி பெரிய நாயகியம்மன் கோயிலில் ஆனித்திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆனிஉத்திர தரிசனத்தை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயில் நடராஜர் சன்னதி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நடராஜருக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம், பழங்கள் உள்ளிட்ட 16வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின் வெளிப்பிரகாரம், நான்குரதவீதி நடராஜர் திருவுலா வந்தார். சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நடராஜர், சிவகாமிஅம்மனுக்கு மகா தீபாரானை நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இதேபோல பெரியநாயகியம்மன் கோயில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர் நிரப்பிய கும்பங்கள் வைத்து சிறப்பு யாகபூஜை நடந்தது. அதன்பின் பெரியநாயகியம்மன், முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானை, கைலாசநாதர் தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.