Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மணப்பாடு ஆலயத்தில் மகிமைப் பெருவிழா ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தசராவில் வேடம் அணியும் பக்தர்கள் இரும்பினாலான ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2011
11:09

உடன்குடி : குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என தசரா குழு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இத்திருவிழாவில் கலந்து கொள்ள தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் உள்ளன. இந்த தசரா குழுக்கள் திருவிழா காலங்களில் எப்படி நடந்து கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் கோயில் கலையரங்கத்தில் நடந்தது. கோயில் நிர்வாக அதிகாரி சங்கர் தலைமை வகித்தார். இதில் கோயில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், கோயில் கணக்கர் டிமிட்ரோ, பாரத திருமுருகன் திருச்சபை தலைவர் மோகனசுந்தரம், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன், சிதம்பரம் உட்பட ஏராளமான தசரா குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தசரா குழு அமைப்பவர்கள் முறையாக கோயில் நிர்வாக அனுமதியுடன் துவங்க வேண்டும், தசரா குழுக்கள் கோயிலுக்கு வரும் போது மற்ற பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் அமைதியாக அம்மனை தரிசிக்க வேண்டும். குறிப்பாக 10ம் திருநாளில் கோயிலுக்கு வரும் தசரா குழு கோயில் முன்பு ஒரு சில நிமிடம் மட்டுமே தசரா நிகழ்ச்சியை நடத்த வேண்டும், மேலும் தசரா வேடம் அணியும் பக்தர்கள் சூலாயுதம், ஈட்டி, வாள் போன்ற இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar