Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்க கோரி ... கோட்டையம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் பொங்கலிட்டு வழிபாடு! கோட்டையம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரவை மீறி திருப்பணிகள் : அறநிலைய துறைக்கு எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2016
05:07

’தமிழகத்தில் பல கோவில்களில், நீதிமன்ற உத்தரவை மீறி திருப்பணிகள் நடக்கின்றன. அப்பணிகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்’ என, அறநிலையத் துறைக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. திருப்பணி என்ற பெயரில் கோவில்களின் பாரம்பரியத்தையும், கலாசார தொன்மையையும் சீர்குலைக்கும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆலய வழிபடுவோர் சங்கம் மற்றும் தன்னார்வலர் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை ஒருங்கிணைத்து ஒரே வழக்காக, நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஜூலை, 5ல், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ’கோவில்களில் கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தால் மட்டுமே திருப்பணிகளை நடத்த வேண்டும்; அதுவும் பழமை மாறாமல் மேற்கொள்ள வேண்டும்’ என, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி பல கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில கோவில்களில் பழமையான கட்டடங்களை முழுவதும் அகற்றி மீண்டும் கட்டப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், நரசிம்மர் சன்னிதி; திருகோஷ்டியூர் சிவன்கோவில், விநாயகர் சன்னிதி; திரு வெள்ளாரை ராமானுஜர் சன்னிதி; ஸ்ரீரங்கம் உள் ஆண்டாள் சன்னிதி, சிறுபுட்டுக்குழி விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் திருப்பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது. அறநிலையத்துறை மீது ஏற்கனவே வழக்கு தொடர்ந்த, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் அறநிலையத்துறை கமிஷனர் வீரசண்முக மணிக்கு இ - மெயில் மூலம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ’நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி திருப்பணி என்ற பெயரில், பழமையான கோவில் கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன; இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் அவமதிப்பு தொடர்பாக வழக்கு தொடரப்படும்’ என, தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அறநிலையத்துறை துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar