கோட்டையம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் பொங்கலிட்டு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2016 06:07
தேவகோட்டை: தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயில் ஆடிபொங்கல் திருவிழா நடந்தது. ஆடி முதல் திங்கள் அன்று விருசுழியாற்றங்கரை அருகில் அமைந்துள்ள பூர்வீக கோயிலிலிருந்து மேளதாளத்துடன் மண் எடுத்து வைத்து நகர பள்ளிக்கூடம் அருகே கோயில் மேடை அமைக்கப்பட்டு முதல் செவ்வாய் காப்புகட்டி முதல் பொங்கலிடப்பட்டது. இரண்டாவது செவ்வாயில் கோயில் சார்பில் பகல் புள்ளி பொங்கல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல்வைத்தும் மாவிளக்கு ஏற்றியும் வழிபட்டனர். முன்னதாக தினமும் பீடத்திற்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.