Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிஅமாவாசை, ஆடிப்பெருக்கு: ... திருநள்ளார் தீர்த்த குளத்தை துாய்மைப்படுத்தும் பணி திருநள்ளார் தீர்த்த குளத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கனகநாச்சியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா
எழுத்தின் அளவு:
கனகநாச்சியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா

பதிவு செய்த நாள்

02 ஆக
2016
12:08

வேலுார்: தமிழகத்திடம் இருந்து ஆந்திரா கைப்பற்றிய கனகநாச்சியம்மன் கோவிலில், இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஆந்திர அறநிலையத்துறை செய்துள்ளது. வேலுார் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில், புல்லுார் பெரும்பள்ளம் பகுதியில் உள்ள, பாலாறு தடுப்பணையை, ஆந்திர அரசு உயர்த்தி கட்டியது. இதற்கு, தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. தடுப்பணை அருகே, 50 ஆண்டுகளாக, தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கனகநாச்சியம்மன் கோவிலையும், ஆந்திர மாநில அறநிலையத்துறை கைப்பற்றியது. தொடர்ந்து, கோவில் நிர்வாகத்துக்கு, 13 அறங்காவலர்களையும் நியமித்தது. இதில், ஏழு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், கனக நாச்சியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா, இன்று கொண்டாடப்படுகிறது. இன்று, திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து அர்ச்சகர்களை வரவழைத்து, விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. அதிகாலை, 3:00 மணிக்கு அபிஷேகம், 5:00 மணி முதல் தரிசனம், 6:00 மணி முதல் குழந்தை வரம் வேண்டுதல், பேய் ஓட்டுதல், காலை, 8:00 மணி முதல், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக குளியல் மற்றும் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி, முடி காணிக்கை செலுத்தும் வசதி, இலவச பொது மருத்துவ முகாம் ஆகியவற்றுக்கு, ஆந்திர அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. விழாவுக்கு, ஏராளமான பக்தர்கள் வருவர் என்பதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், தடுப்பணையில் இரும்பு கம்பி வலை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா மற்றும் தமிழக போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பள்ளிக்கரணை; பள்ளிக்கரணை சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நாளை 25ம் தேதி கோலாகமாக நடைபெற ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருச்சானூர் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பத்மாவதி தாயார் சந்திர பிரபை வாகனத்தில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை;  திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர்  திருப்பணியை குருமகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar