Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிஅமாவாசை, ஆடிப்பெருக்கு: ... திருநள்ளார் தீர்த்த குளத்தை துாய்மைப்படுத்தும் பணி திருநள்ளார் தீர்த்த குளத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கனகநாச்சியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா
எழுத்தின் அளவு:
கனகநாச்சியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா

பதிவு செய்த நாள்

02 ஆக
2016
12:08

வேலுார்: தமிழகத்திடம் இருந்து ஆந்திரா கைப்பற்றிய கனகநாச்சியம்மன் கோவிலில், இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஆந்திர அறநிலையத்துறை செய்துள்ளது. வேலுார் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில், புல்லுார் பெரும்பள்ளம் பகுதியில் உள்ள, பாலாறு தடுப்பணையை, ஆந்திர அரசு உயர்த்தி கட்டியது. இதற்கு, தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. தடுப்பணை அருகே, 50 ஆண்டுகளாக, தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கனகநாச்சியம்மன் கோவிலையும், ஆந்திர மாநில அறநிலையத்துறை கைப்பற்றியது. தொடர்ந்து, கோவில் நிர்வாகத்துக்கு, 13 அறங்காவலர்களையும் நியமித்தது. இதில், ஏழு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், கனக நாச்சியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா, இன்று கொண்டாடப்படுகிறது. இன்று, திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து அர்ச்சகர்களை வரவழைத்து, விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. அதிகாலை, 3:00 மணிக்கு அபிஷேகம், 5:00 மணி முதல் தரிசனம், 6:00 மணி முதல் குழந்தை வரம் வேண்டுதல், பேய் ஓட்டுதல், காலை, 8:00 மணி முதல், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக குளியல் மற்றும் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி, முடி காணிக்கை செலுத்தும் வசதி, இலவச பொது மருத்துவ முகாம் ஆகியவற்றுக்கு, ஆந்திர அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. விழாவுக்கு, ஏராளமான பக்தர்கள் வருவர் என்பதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், தடுப்பணையில் இரும்பு கம்பி வலை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா மற்றும் தமிழக போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar