Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துவரிமானில் கிருஷ்ண ஜெயந்தி 5,100 விநாயகர் சிலை பிரதிஷ்டை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கிரிவல பாதையை ஆய்வு செய்ய கமிட்டி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2016
12:08

சென்னை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, தலைமை வனப் பாதுகாவலர் இடம் பெறும், கமிட்டியை நியமித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு உத்தரவிட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவலப் பாதை, விரிவாக்கத்தின் போது, மரங்கள் வெட்டப்படுவதாக, நாளிதழில் வந்த செய்தி அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மரங்கள் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதிமக்களும் வழக்கு தொடர்ந்ததால், கிரிவலப் பாதை பணிகளுக்கு, இடைக்கால தடை விதிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர், நேற்று பிறப்பித்த உத்தரவு:

திருவண்ணாமலை கிரிவலப் பாதையை ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜே.எ.கே.சம்பத் குமார் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை வனப் பாதுகாவலர் எஸ்.சேகர் இடம் பெறும் கமிட்டி நியமிக்கப்படுகிறது. கிரிவலப் பாதையில், மண் சாலை அமைக்க முடியுமா; மரங்கள் வெட்டாமல் தார் சாலை அமைக்கலாமா என, இந்த கமிட்டி ஆலோசிக்கும். கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகள், நீர்நிலைகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தி, அக்., 6ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்படுள்ள கிரிவலப் பாதையில், திருவண்ணாமலை நகர பகுதிக்குள் வரும், கடலுார் - சித்துார் சாலையில் மரங்கள் இல்லாததால், அந்த சாலையில் பணிகளை மேற்கொள்ளலாம்; மற்ற நான்கு பகுதிகளிலும் இடைக்கால தடை தொடரும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar