திருவண்ணாமலை: கலசபாக்கம் அருகே, மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள், நேற்று முன்தினம் மாலை அங்குள்ள அரியாத்தம்மன், பெரியாத்தம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். பின், அப்பகுதியில் உள்ள ஏரியின் மதகு அருகே சென்று, மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது வழிபாடு நடத்தினர். இதில், மோட்டூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.