Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுற்றுச் சூழலை பாதிக்காத.. மாட்டுச் ... திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதமடைந்த தி.மலை ராஜகோபுர நிலைப்படி கிரேன் மூலம் மரத்தூண் நிறுத்தம்
எழுத்தின் அளவு:
சேதமடைந்த தி.மலை ராஜகோபுர நிலைப்படி கிரேன் மூலம் மரத்தூண் நிறுத்தம்

பதிவு செய்த நாள்

01 செப்
2016
11:09

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரத்தில் சேதமடைந்துள்ள நிலைப்படிகளை புதுப்பிக்க, ராட்சத கிரேன் மூலம் மரத்துாண் நிலைப்படியில் நிலைநிறுத்தும் பணி நடக்கிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகள், 25 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கின்றன. இதற்காக, 13 நிலைகளுடன், 217 அடி உயரமுள்ள ராஜகோபுரம், 86 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. ராஜகோபுரத்தில், மா அருணை விநாயகருக்கு எதிரே உள்ள நான்காவது துாணின் மேற்கூரையில், 10 டன் எடை கொண்ட பீமில், 4 அடி துாரத்துக்கு விரிசல் ஏற்பட்டது. இதை சரிசெய்ய, சென்னை, ஐ.ஐ.டி., கட்டமைப்பு பொறியியல் ஆய்வக உதவி பேராசிரியர், அருண் மேனன் கடந்த, 27ம் தேதி ஆய்வு செய்தார். கோபுரத்தின் விரிசல் அபாயகரமான இடத்தில் உள்ளது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் ஒட்டி சீர்செய்ய வேண்டும் என, பரிந்துரைத்தார். மேலும், கோபுரத்தின், 13 நிலைகளில் பொருத்தப்பட்டுள்ள தேக்கு மரத்திலான படிகள் சேதமடைந்துள்ளன; இதை புதுப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தினர். அதன்படி, நிலைப்படிகளில் இலுப்பை மரத்திலான நிலைப்படி தயார் செய்து, கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன. இதை நிலைநிறுத்த, 217 அடி உயரமுள்ள கோபுரத்தில், ராட்சத கிரேன் மூலம் மரம் நிலைப்படியில் நிலைநிறுத்தும் பணி நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று (20ம் தேதி) ... மேலும்
 
temple news
சிவன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்த தினமே பிரதோஷம். சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். பழநி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில்  வைகாசி விசாகப்  பெருந்திருவிழாவை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை, பழங்காநத்தம் அக்ரஹாரம் கோதண்டராம சுவாமி கோயிலில், சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar