பதிவு செய்த நாள்
15
செப்
2016
11:09
திருப்பதி: நன்கொடை தருவோருக்கு, இரு நாட்களில், டிஜிட்டல் பாஸ்புக் வழங்கும் சேவையை, திருப்பதி தேவஸ்தானம் துவக்கி உள்ளது. திருப்பதி தேவஸ்தான இணையதளம் மூலம், நன்கொடை வழங்குவோரின் விபரங்களை பதிவு செய்து, உடனே ரசீது வழங்கி, மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவையை, தேவஸ்தானம் துவக்கி உள்ளது. நன்கொடை பெறப்பட்ட, 48 மணி நேரத்திற்குள், நன்கொடையாளர்களுக்கு, டிஜிட்டல் பாஸ்புக் வழங்கப்படும். பாஸ்புக் பெற்ற பின், ஏழுமலையான் தரிசனம், வாடகை அறை, கூடுதல் லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றை, வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.