பதிவு செய்த நாள்
17
செப்
2016
11:09
அனுப்பர்பாளையம்: திருப்பூர், அவிநாசி ரோடு அம்மாபாளையத்தில் உள்ள சின்னண்ணன், பெரியண்ணன் கோவில் பொங்கல் திருவிழா, 2ல் துவங்கி, நடைபெற்று வருகிறது. பொட்டுசாமிக்கு பொங்கல் வைத்தல்; 12ல், பட்டத்தரசியம்மனுக்கு பொங்கல் வைத்தல், கொம்பன் கட்டுதல்; 15ல், படைக்கலம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று, காலை, 9:00 மணிக்கு கிளி பிடித்தல்; மதியம், 1:00 மணிக்கு கொம்பன் குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக அம்மாபாளையம் கஸ்தூரி பாய் வீதியில் இருந்து, நேர்த்தி கடனுக்கு வழங்கப்பட்ட, 24 பன்றிகளை நீராட்டி, மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். இன்று மதியம், 1:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.