பதிவு செய்த நாள்
20
செப்
2016
12:09
திருவள்ளூர்: விநாயகர் கோவில்களில் நேற்று, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.பஞ்சேஷ்டியை அடுத்த, நத்தம் கிராமத்தில், சித்தி கணபதி, ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள காரிய சித்தி கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று, சங்கட நிவாரண ஹோமம் நடந்தது. பின், ககார ஸகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. இதேபோல், ஜெயா நகர் விஸ்தரிப்பில் உள்ள வல்லப கணபதி கோவிலில், கணபதி ஹோமம், மகா தீபாராதனை மற்றும் இரவு பிரார்த்தனை தேங்காய் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல், திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் கோவிலில் உள்ள, 11 விநாயகர் கொண்ட விநாயகர் சபைக்கு பாலாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் ஆயில்மில் வெற்றி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.