Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மணக்குள விநாயகர் கோவிலில் பவித்ரோத்சவ விழா மணக்குள விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் புதிய கொடிமரம் அமைக்கும் பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் புதிய கொடிமரம் அமைக்கும் பணி துவக்கம்!

பதிவு செய்த நாள்

21 செப்
2016
11:09

சபரிமலை: சபரிமலையில், புதிய கொடிமரம் அமைப்பதற்காக, பம்பையில் மரம் செதுக்கும் பணி துவங்கியது. சபரிமலையில், தற்போதுள்ள கொடிமரம் பழுதாகி காணப்படுவதால், புதிய கொடிமரம் அமைக்க, தேவசம் போர்டு முடிவு செய்தது. இதற்காக, புதிய தேக்கு மரம் வெட்டப்பட்டு, பம்பை எடுத்து வரப்பட்டது. நேற்று, இந்த மரத்தை செதுக்குவதற்கான பணிகள் துவங்கின. மரத்தை உருட்டி செதுக்கி முடிந்த பின், பச்சிலை மருந்துகள் கலந்த எண்ணெயில் ஊற வைக்கப்படும். இதற்காக, 42 அடி நீளமும், 2 அடி அகலத்திலும் எண்ணெய் தோணி தயாராகிறது.

மரத் தின் நீளம், 40 அடி. எண்ணெயில், 32 வகை பச்சிலை மருந்து சேர்க்கப் படும். அக்., 20-ல், தோணியில் மரம் போடப்படும். பூஜைகளில் மாற்றம்: சபரி மலையில், புதிய தங்க கொடிமரம் அமைப்பது, அதற்கான முகூர்த்தம் நிச்சயிப்பது தொடர்பாக, தாம்பூல பிரஸ்னம் பார்க்கப்பட்டது. அதில், சில தோஷங்கள் உள்ளன; அதற்கு பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என, கூறப்பட்டது. அதன்படி, தற்போது சபரிமலையில் பரிகார பூஜைகள் நடந்து வருகின்றன. அய்யப்பன் மற்றும் மாளிகைப்புறத்தம்மன் விக்கிரகங்களுக்கு, 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், அஷ்டபந்தன கலசம், அக். 20ல் நடைபெறும். இதற்காகவும், ஐப்பசி மாத பூஜைகளுக்காகவும் சேர்த்து, அக்., 16 மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கும். 20ம் தேதி அதிகாலை, 4:40 மணிக்கும், 6:00 மணிக்கும் இடையிலான முகூர்த்தத்தில் அஷ்டபந்தன கலசம் நடைபெறும். இதையொட்டி, அக்., 20, 21ல் நெய்யபிஷேகம் கிடையாது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar