தளவாய்புரம், சொக்கநாதன்புத்துார் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல்விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.சொக்கநாதன்புத்துார் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா கடந்த மாதம் 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 7 ம் நாள் பூ பல்லக்கில் மாரியம்மன், 8ம் நாள் தண்டியல் சப்பரத்தில் வீதி உலா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை தேரோட்டம் நடந்தது. ஏ.கே.ஆர் குரூப்ஸ் சேர்மன் காமராஜ்,மேனேஜிங் டைரக்டர் ராஜ்பிரியம் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.தேருக்கு பின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் குளிர்பானம் வழங்கப்பட்டது. மாலையில் பக்தர்கள் முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.