மகிஷாசுரனை அம்பிகை வெற்றி கொண்ட நாள் விஜயதசமி. மேற்கு வங்காள மாநிலத்தில் இந்நாளில் களிமண்ணால் செய்யப்பட்ட துர்க்கை, காளி விக்ரகங்களை வழிபடுவர். பூஜை முடிந்ததும் சிலைகளைக் கடலில் கரைத்து விடுவர். அப்போது மீண்டும் தேவி அடுத்த ஆண்டு நவராத்திரிக்கு, தங்கள் வீட்டுக்கு பூஜைக்கு வர வேண்டும் என வேண்டுவர்.