Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ... திருப்போரூர் கோவில்களில் நவராத்திரி பண்டிகை கோலாகலம் திருப்போரூர் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லவர் கால குபேரன் புடைப்பு சிற்பம் திருநாவலூர் கோவிலில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பல்லவர் கால குபேரன் புடைப்பு சிற்பம் திருநாவலூர் கோவிலில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

12 அக்
2016
12:10

விழுப்புரம்: திருநாவலுார் சிவன் கோவில் மதில் சுவரில், பல்லவர் காலத்தை சேர்ந்த குபேரன் புடைப்பு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, திருநாவலுார் கிராமத்தில் பக்தஜனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில், விழுப்புரத்தில் உள்ள, அரசு கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் ரமேஷ், ஆய்வாளர் ஜீவா, ஜோதிபிரகாஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு குறித்து, உதவி பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது: எங்களது ஆய்வில், கோவில் வளாகத்தில், பல்லவர் காலத்தை சேர்ந்த குபேரன் புடைப்பு சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. கோவிலின் மேற்கு மதில் சுவரின் கிழக்கு பக்கத்தில், குபேரன் புடைப்பு சிற்பத்தை, பிற்காலத்தில் வைத்து கட்டியுள்ளனர். நின்ற நிலையில் யானையும், அதற்கு மேலுள்ள பலகை போன்ற பகுதியில் ஸ்ரீகலிநாரை என்று பல்லவர் கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட வாசகமும் காணப்படுகிறது. இதையடுத்துள்ள நாசிகூடு போன்ற பகுதியின் நடுவில் குபேரன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

குபேரன் வலது காலை பீடத்தில் மடித்தும், இடது காலை ஊன்றியும் அமர்ந்த நிலையில் உள்ளார். வலது கையை திண்டின் மீது வைத்துள்ளார். இடது கை அபய முத்திரை காட்டியவாறு உள்ளது. இவரது வலதுபுறத்தில் பதுமநிதியை காட்ட பத்மமும், இடதுபுறத்தில் சங்கநிதியை நினைவூட்ட சங்கும் காணப்படுகிறது. இச்சிற்பம் குள்ளமான உருவமும், பருத்த முகமும், பெரிய வயிறும் கொண்டுள்ளது. தலையில் மகுடம், காதில் பத்ரகுண்டலம், தலையின் இருபுறமும் தாழ்சடை பெற்று, கழுத்தில் பெரிய மாலை, தடித்த முப்புரி நுால், கைகளில் கைவளைப் பெற்று காணப்படுகிறது. இதேபோன்று, கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தச்சூர் என்னும் ஊரிலும் பல்லவர் கால குபேரன் சிற்பம் உள்ளது. புதுச்சேரி மாநிலம் திருபுவனை பெருமாள் கோவில் கருவறையின் வடக்கு அதிட்டானத்தில் குபேரன் சிற்பம் உள்ளது. பல்லவர் காலத்தில், திருநாவலுாரில், கலிநாரீஸ்வரம் என அழைக்கப்படும் சிவன் கோவில் இருந்தது பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆனால், அக்கோவில் பிற்காலத்தில் மறைந்துபோனது. எனினும், அக்கோவிலில் இருந்த குபேரன் சிற்பம், 16 பட்டை லிங்கம் மற்றும் கோவில் கட்டுமான கற்களான செம்பராங்கற்கள் (மணல் கல்) தற்போதுள்ள, பக்தஜனேஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படுகிறது.

இதன்மூலம், பல்லவர் காலத்தில் சிவன் கோவில் ஒன்று இருந்தது என்பது உறுதியாகிறது. அந்த கோவிலின் வடபுறத்தில் இந்த குபேரன் சிற்பம் இருந்திருக்க வேண்டும். கோவில் அழிந்த பின், பக்தஜனேஸ்வரர் கோவில் மதில் சுவரில் இவை பிற்காலத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. இவ்வாறு, உதவி பேராசிரியர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar