Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமி திருவீதி உலா: சொக்க வைத்த ... தசரா உற்சவ தேர் ஊர்வலம் மசினகுடியில் கோலாகலம் தசரா உற்சவ தேர் ஊர்வலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொடர் விடுமுறையால் திருத்தணி கோவிலில் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
தொடர் விடுமுறையால் திருத்தணி கோவிலில் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

12 அக்
2016
01:10

திருத்தணி: தொடர் விடுமுறையால் திருத்தணி முருகன் மலைக்கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த, 8ம் தேதி முதல், இன்று (12ம் தேதி) வரை தொடர் விடுமுறை ஏற்பட்டதால் வழக்கத்திற்கு மாறாக முருகன் மலைக் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், பல மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசிக்கின்றனர். நேற்று, பொது தரிசன வழியில், பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். மேலும், நேற்று, விஜயதசமியை முன்னிட்டு, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதுதவிர, நேற்றுடன், நவராத்திரி விழா முடிவடைந்ததால், கஜலட்சுமி அம்மையார் மற்றும் உற்சவர் முருகப்பெருமான் மலைக்கோவிலில் இருந்து, மாலை, 6:00 மணிக்கு, திருத்தணி நகர், எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள படாசெட்டி குளத்திற்கு அருகில் எழுந்தருளினார். தொடர்ந்து, அங்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு, 8:45 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் மலைக்கோவிலுக்கு சென்றடைந்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar