பதிவு செய்த நாள்
22
அக்
2016
12:10
உளுந்துார்பேட்டை: முதல்வர் ஜெ., பூரண நலம்பெற வேண்டி, உளுந்துார்பேட்டையில், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தலைமையில், அக்னி கரக ஊர்வலம் நடந்தது.
உளுந்துார்பேட்டை ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில், முதல்வர் ஜெ., பூரண நலம்பெற வேண்டி, தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக குமரகுரு தலைமையில், கட்சியினர் அக்னி கரகம் ஏந்தி சென்றனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மணிராஜ், நகர செயலாளர் துரை, ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் சியமளாபிரதீப்ராஜ், மாலதிராமலிங்கம், ஜெயபால், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், ஓட்டுநர் அணி வேங்கையன், இளைஞரணி ஸ்ரீதர், நகர துணை செயலாளர் கஜேந்திரன், ஊராட்சி தலைவர் செல்வக்குமார், முன்னாள் அறங்காவலர் சேகர், நிர்வாகிகள் ராமசாமி, அன்பழகன், ஆறுமுகம், பக்கிரிசாமி, வழக்கறிஞர்கள் தண்டபாணி, திலீப், கூட்டுறவு சங்க தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் கேண்டர்ராஜா, ராபர்ட், தனசேகர், தேவநாதன், கோபால் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.