திருடுபோவதை தடுக்க கோயில்களில் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்: வேதாந்தம்ஜி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2016 05:10
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த வேதாந்தம்ஜி தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவன் கோயில்களில் விலை மதிப்பில்லாத மரகதலிங்கங்கள் உள்ளது. அவை ஒவ்வொன்றாக திருடுபோய் கொண்டு இருக்கிறது. கோயில்களில் உரிய பாதுகாப்பு இல்லாததே திருடுபோவதற்கு வழிவகுக்கிறது. கோயில்களை நிர்வகிக்கக்கூடிய நிர்வாக அதி காரிகள் ஒருநபர் பலகோயில்களை கண்காணிக்க வேண்டியுள்ளது. ஒரு நிர்வாக அதிகாரிகள் ஒன்று, இரண்டு கோயில்களை மட்டுமே நிர்வகிக்க வேண்டும். அப்போது தான் கோயில் களில் திருட்டு, ஊழல் நடைபெறுவதை தடுக்க முடியும்.அறநிலையத்துறை மூலம் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் ஆகம வீதிமுறைகள் குறித்து பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இல்லை என்றாலும் அவர்களுக்கு ஆன்மீகம், ஆகமம் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். தமிழகத்தில் காவிரிநீர் பிரச்னையை மத்தியஅரசு தலையிட்டு உனடியாக தீர்த்துவை க்க வேண்டும். பெண்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று தான் தலாக் முறையை கைவிட வலியுறுத்துகிறோமே தவிர மதரீதியான பிரச்னை இல்லை.பெண்களுக்கு உரிய அ னைத்து உரிமைகள், சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும். தமிழக முதல்வர் விரைவில் பூரண குணமடைந்து தனது பணியை தொடர இறைவனை பிரார்த்திக்கிறோம். பூஜாரிகளுக்கு செ ய்வதாக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்றார்.