Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி கோவிலில் சூரசம்ஹாரம் ... பிரசன்ன விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம் பிரசன்ன விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களின் சிரமம் குறைத்த சீர்பாதங்கள்!
எழுத்தின் அளவு:
பக்தர்களின் சிரமம் குறைத்த சீர்பாதங்கள்!

பதிவு செய்த நாள்

07 நவ
2016
12:11

மதுரை: வாடிப்பட்டி பொன்பெருமாள் மலைக்கு செல்ல படிக்கட்டுகள் இல்லாமல் கரடு முரடான முரட்டுப்பாதையில் நடந்து செல்ல இயலாமல் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். இதில் முதியோர் மலையேற பட்டபாடு சொல்லி மாளாது.பெருமாளே இது என்ன சோதனை... மாதவா... உன்னை தரிசிக்க ஏற்படும் சிரமத்தை தவிடு பொடியாக்கு,’ என பெருமாளின் பக்தர்கள் ஏக்கப்பெருமூச்சு விட்டனர். இதற்கிடையே திருவேடகம் விவேகானந்த கல்லுாரி என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மற்றும் இளம் விளையாட்டு வீரர்கள் என மாணவ படையினர் பொன்பெருமாள் மலைக்கு கடந்த மே 6ம் தேதி சென்றனர். பின், வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மலையில் முகாமிட்டு மொத்தம் 564 படிக்கட்டுகளை ஒரு மாதத்திற்குள் நேர்த்தியாகவும், உறுதித்தன்மையுடனும் அமைத்து கடந்த ஜூன் 6ம் தேதி பக்தர்களுக்கு அர்ப்பணித்தனர். தற்போது இளையோர் முதல் முதியோர் வரை பக்தர்கள் பொன்பெருமாள் மலைக்கு படையெடுத்து வருகின்றனர். பெருமாளே இது என்ன சோதனை’ என வேண்டிய பக்தர்கள் பெருமாளே உன் கருணைக்கு அளவே இல்லையா,’ என மகிழ்ச்சி பொங்க மலையேறி பெருமாளை மனம் குளிர சேவித்து வருகின்றனர்.

உடற்கல்வி இயக்குனர் சீனிமுருகன், கல்லுாரியில் செயல்படும் அப்பர் சுவாமிகள் உழவாரக்குழுவை சேர்ந்த மாணவர்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இணைந்து இச்சேவையை செய்தனர். வறண்ட மலையை சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறோம்,’’ என்றார். ஆசிரியர் சந்திரசேகரன், ஒரு யூனிட்டிற்கு 50 மாணவர்கள் என இரண்டு யூனிட் மாணவ குழு அமைத்து படிக்கட்டு கட்டுமானப்பணியை செய்தோம். கல்லுாரி செயலர் சுவாமி நியமானந்தா மகராஜ், முதல்வர் ராமமூர்த்தி  முயற்சியால் அடிவாரத்தில் ஜெயவீர ஆஞ்சநேயர், மலை மீது பெருமாள் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மலை மீது குடிநீர் வசதி உண்டு,’’ என்றார். விழாக்களின் போது வீதி உலா வரும் சுவாமி சப்பரங்களை சுமந்து வரும் சீர்பாதங்கள் போல் பொன்பெருமாள் மலைக்கு செல்ல படிக்கட்டுகளை அமைத்து பக்தர்களின் பாதங்களை சுமக்கும் சீர்பாதங்களாக மிளிரும் மாணவர்களின் மகத்தான சேவை பாராட்டுக்கு உரியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar