Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தர் பீடத்தில் இந்து ... 108 அடி உயர முருகன் சிலைக்கு பாதம் அமைக்க சிறப்பு பூஜை 108 அடி உயர முருகன் சிலைக்கு பாதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

பதிவு செய்த நாள்

14 நவ
2016
10:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த அன்னாபிஷேகத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உணவு படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று, அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம்.

அதன்படி, நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில், மூலவர் அருணாசலேஸ்வரர் மற்றும் கல்யாண சுந்தரேஸ்ரவரர் ஆகியோருக்கு, 130 கிலோ அரிசியால் சாதம் வடித்து அன்னாபி ?ஷகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. இதனால், நேற்று மாலை, 3:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாலை, 6:01 மணி முதல் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அருணாசலேஸ்வரர் கோவிலில், 150 கிலோ அரிசியால் சாதம் செய்து, அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஐப்பசி மாத பவுர்ணமி நேற்றிரவு, 10:29 மணிக்கு துவங்கியது. இன்று இரவு, 8:09 மணி வரை பவுர்ணமி உள்ளது. நேற்றிரவு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். பவுர்ணமியை முன்னிட்டு, அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. 50 ரூபாய் கட்டண தரிசனம், பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar