Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருக்கழுக்குன்றம் சொக்கம்மன் ... சத்யசாய் அமைப்பின் அகண்ட நாம பஜனை சத்யசாய் அமைப்பின் அகண்ட நாம பஜனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருளில் வல்லக்கோட்டை கோவில் குளம்: நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
இருளில் வல்லக்கோட்டை கோவில் குளம்: நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

14 நவ
2016
11:11

வல்லக்கோட்டை : வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி கோவில், வஜ்ர தீர்த்த குளத்தை சுற்றி மின் விளக்கு அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், பரணி, கிருத்திகை, தைப் பூசம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, தமிழ் வருடப் பிறப்பு போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை விசஷேமாக நடைபெறும். இந்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், மொட்டை போட்டு, கோவிலின் வஜ்ர தீர்த்த குளத்தில் நீராடி, சுப்ரமணிய சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்நிலையில், இந்த கோவில் குளம் பராமரிப்பு இல்லாமல் இருந்ததை அடுத்து, தனியார் தொழிற்சாலை நிர்வாகம், இந்த குளத்தை சீரமைத்து, சுற்றுச் சுவர் நடைபாதை அமைத்தது. ஆனால், இந்த குளத்தை ஒட்டி செல்லும் சாலைகள் ஊராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருப்பதால், மின் விளக்குகள் பணியை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், இந்த குளக்கரை அருகே உள்ள சாலைகளிலும், குளக்கரையின் மேல் பகுதிகளிலும் மின் விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் குளக்கரை, இருட்டாக காட்சி அளிக்கிறது. இதனால், விசஷே நாட்களில் வரும் பக்தர்கள், குளத்தில் இறங்கும் போது தவறி விழுந்து, விபத்துக்குள்ளாகின்றனர். கோவில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar