Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கனியாமூரில் கோவில் கும்பாபிஷேக விழா உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் நிலத்தை மீட்க ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2016
03:11

இடைப்பாடி: இடைப்பாடி, பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் நிலத்தை மீட்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. சேலம் மாவட்டம், இடைப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம், இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ளது. இந்த நிலத்தில், திருமணம் மண்டபம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த நிலத்திற்கு அருகே, 4.69 ஏக்கர் நிலம் தற்போது தனியார் ஒருவரிடம் உள்ளது. இந்த நிலம் இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான எனக்கூறி, சேலம், ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத்திடம் புகார் மனு மனு அளித்தார். மேலும், இந்த நிலம் சம்மந்தமான ஆவணங்களை தர வேண்டும் எனக்கூறி இடைப்பாடி சார்-பதிவாளருக்கும் கடிதம் கொடுத்து இருந்தார். சார்-பதிவாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், 1972ல் பாகப்பிரிவினை மூலம் இந்த நிலம் மீனாட்சியம்மாள் என்பவருக்கு சொந்தமாகியுள்ளது. அதற்கு பிறகு பலரிடம் விற்கப்பட்டுள்ளது என்றும், 1972க்கு முன்னர், இந்த நிலத்திற்கான ஆவணங்கள் எதுவும் பதியப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, 1972க்கு முன்பு கோவில் பெயரில் இருந்த இந்த நிலத்தின் பட்டாவை ரத்து செய்து, நிலத்தை மீட்டு தரவேண்டும் என, ராதா கிருஷ்ணன், கொடுத்த புகாரையடுத்து, நேற்று இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில், சங்ககிரி ஆர்.டி.ஓ., பால் பிரின்ஸி ராஜ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், அந்த நிலம் சம்மந்தமான ஆவணங்களை தாசில்தார் சண்முகவள்ளி, நஞ்சுண்டேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் ஆர்.ஐ., கேசவன், வி,ஏ,ஓ., அப்புசாமி ஆகியோரிடம் விளக்கம் கேட்டனர். மீண்டும் விரைவில் மற்றொரு கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar