Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திறக்கப்படாத பெருமாள் கோயில் ... திருவண்ணாமலை கோவிலில் ரூ.77 லட்சம் காணிக்கை திருவண்ணாமலை கோவிலில் ரூ.77 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி தீர்த்த கடற்கரை படிகள்... சேதம்... புனித நீராட பக்தர்கள் சிரமம்
எழுத்தின் அளவு:
அக்னி தீர்த்த கடற்கரை படிகள்... சேதம்... புனித நீராட பக்தர்கள் சிரமம்

பதிவு செய்த நாள்

18 நவ
2016
12:11

ராமேஸ்வரம்,ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் அமைக்கப்பட்டுள்ள படிகட்டுகள் சேதமடைந்துள்ளதால் கடலில் இறங்கி புனித நீராட பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யவும், முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் வட, தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகின்றனர். இவர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் இறங்கி புனித நீராடிய பின்னரே திதி கொடுப்பதும், கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பக்தர்கள் கடலுக்குள் இறங்கி நீராட வசதியாக வடமாநில டிரஸ்ட் குழுவினர் கடற்கரையில் 50 மீட்டர் துõரத்திற்கு படிகட்டுகள் அமைத்துள்ளனர். கடலில் படிகட்டு அமைப்பது இயற்கைக்கு மாறான நடவடிக்கை என, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த பாதுகாப்பு குழு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தும் படிகட்டுகள் அகற்றப்படவில்லை. மாறாக வடமாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள், படிக்கட்டுகள் வழியாக கடலுக்குள் இறங்கி நீராடி வருகின்றனர். இந்நிலையில் படிக்கட்டுகள் பாசி படிந்தும், இடிந்தும் சேதமடைந்துள்ளது. தண்ணீருக்குள் மூழ்கியிருக்கு இடிந்த படிகட்டுகளில் பக்தர்கள் குறிப்பாக முதியவர்கள் கால் வைக்கும் போது சறுக்கி விழுந்து காயமடைகின்ற பரிதாபம் அடிக்கடி நடக்கிறது.

மேலும் படிக்கட்டுகள் அருகே பக்தர்கள் விட்டுசெல்லும் துணிகள் தேங்கி கிடப்பதால் சுகாதார கேடும் நிலவுகிறது. ஆபத்தை உணர்ந்து இயற்கைக்கு மாறான படிகட்டுகளை அகற்ற திருக்கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து இந்து முன்னணி செயலாளர் வக்கீல் ராமமூர்த்தி கூறுகையில்,“ இயற்கைக்கு மாறாக அக்னி தீர்த்த கடற்கரையில் அமைத்துள்ள படிக்கட்டுகளால், பக்தர்கள் இடறி விழுந்து காயமடைகின்றனர். இடையூறாக உள்ள படிக்கட்டுகளை அகற்ற பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. தற்போது படிக்கட்டுகள் அருகே துணிகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. படிக்கட்டுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar