பதிவு செய்த நாள்
25
நவ
2016
12:11
பழநி: பழநி மலைக் கோவில் உண்டியலில், மூன்று நாட்களில், 25.19 லட்சம் ரூபாய் வசூலாகி உள்ளது. பழநி மலைக் கோவிலில், நவ., 21ல், உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில், இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது. நேற்று, மீண்டும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், தங்கம், 57 கிராம், வெள்ளி, 6,100 கிராம், ரொக்கம், 25.19 லட்சம் ரூபாய் வசூலாகி இருந்தது.