கிணத்துக்கடவு சூலக்கல் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2016 11:11
கிணத்துக்கடவு :கிணத்துக்கடவு அருகேயுள்ள சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் கண்நோய் இருப்பவர்கள் அம்மனிடம் வேண்டி தீர்த்தம் பெற்று செல்கின்றனர். வாரத்தில், செவ்வாய், வெள்ளி மற்றும் மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு அபிசேக பூஜைகள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று காலை 7.30 மணிக்கு சுயம்பாக உள்ள மாரியம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, பின்புறம் உள்ள மாரியம்மன் சிலைக்கு மஞ்சள் அலங்கராம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சூலக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்திருந்து மாரியம்மன்னை வழிபட்டு, தீர்த்தத்தை வாங்கி சென்றனர்.