பெ.நா.பாளையம் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2016 12:12
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்புதுாரில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத ஆதிமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது.
கோவில் வளாகத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஓராண்டு நிறைவையொட்டி, கார்த்திகை மாதம் மூல நட்சத்திரத்தில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில், ஆதிமூர்த்தி பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருமஞ்சனம், பெருமாளுக்கு வஸ்திரம் சாத்துதல், தாயாருக்கு மாங்கல்யம் அணிவித்தல், செண்டாடுதல், நாமசங்கீர்த்தனம், அன்னதானம், பெண்களுக்கு தாலி சரடு வினியோகித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.