மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் உள்ள நடராஜர் சன்னிதிகளில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படும். இந்த நாளில் கோயம்புத்துõர், திருப்பூர் மாவட்ட பெண்கள் மாங்கல்ய நோன்பு நோற்பதுண்டு. அன்று புதிய மாங்கல்ய சரடு கட்டிக் கொள்வர். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் புதுமணத் தம்பதிகள் சுவாமியையும், அம்பாளையும் வழிபட வருவர். கேரளாவில் திருமணமான புதுப்பெண்கள் பூத்திருவாதிரை என்ற பெயரில் இந்த விழாவைக் கொண்டாடுவர். அவர்கள் மணமாகாத பெண்களுக்கு பத்துவித மலர்கள் சூட்டி, எங்களைப் போல உங்களுக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வாழ்த்துவர்.