சின்னம்மாவால் வந்தது சிக்கல்! ஆர்.பி.வி.எஸ்.மணியன் பகீர் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2016 11:12
மதுரை: சின்ன அம்மாவான கைகேயி பெற்ற வரத்தால் ராமரின் வாழ்வில் சிக்கல் வந்தது என்று ஆர்.பி.வி.எஸ்.மணியன் குறிப்பிட்டார். மதுரை எஸ்.எஸ்.காலனி சத்சங்கத்தில் நடந்த ராமாயண தொடர் சொற்பொழிவில் அவர் பேசியதாவது. அயோத்தி மன்னர் தசரதர் தன் மூத்த பிள்ளை ராமனுக்கு பட்டாபிஷேகம் நடத்த விரும்பினார். ராமனின் சின்னம்மா கைகேயி இதை விருப்பமில்லை. முன்பு ஒருநாள் தசரதர், போர்க்களத்தில் தனக்கு அளித்த வரத்தின்படி பட்டாபிஷேகத்தை தடுக்க முடிவெடுத்தாள். ஒரு வரத்தால் ராமன் 14 ஆண்டு காடு செல்லவும், இன்னொரு வரத்தால் தன் மகன் பரதன் நாடாள வேண்டும் எனக் கணவரிடம் வரம் பெற்றாள். இதை அறிந்த ராமன் மலர்ந்த தாமரைப் பூவாக சிரித்த முகத்துடன் ஏற்றார். ராமனின் தாய் கோசலை, நீ பின்பற்றிய தர்மம் துணையாக இருக்கட்டும்’ என்று ஆசியளித்து அனுப்பினாள். இன்பத்திலும், துன்பத்திலும் கணவருடன் இருப்பவளே மனைவி’ என்று சொன்ன சீதை, ராமருடன் புறப்பட்டாள். அண்ணனுக்கு உதவியாக லட்சுமணரும் உடன் கிளம்பினார். தசரதர் செய்வதறியாமல் வருந்தினார். அமைச்சர் சுமந்திரர், குலகுரு வசிஷ்டர் ஆகியோரும் ராமனைத் தடுக்க முயற்சித்தும் பலனில்லை. அயோத்தி மன்னராக அரசாள வேண்டிய ராமன் வாழ்வில், சின்னம்மா கைகேயி பெற்ற வரத்தால் சிக்கல் உண்டானது. ராமர், சீதை, லட்சுமணர் மரவுரி உடுத்தி காட்டுக்குப் பறப்பட்டனர். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சி டிச. 11 வரை மாலை 6:30 மணிக்கு நடைபெறும்.