சிவத்தொண்டர்களுக்கு தனிக்கோயில் நெய்வேலியில் உள்ளது. திருத்தொண்டர் திருக்கோயில் என்னும் பெயரில் உள்ள இக்கோயிலில் நாயன்மார்கள் அறுபத்து மூவரும் பிரதான சந்நிதியில் வீற்றிருக்கின்றனர். தமிழ் மூதாட்டி அவ்வையார் தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்றே குறிப்பிட்டுள்ளார். சிவபெருமான் தன்னை வணங்குவதை விட தன் அடியாரை வணங்குவதையே பெரிதும் விரும்புவார். இங்கு பக்தர்கள் அவரவர் நட்சத்திரத்தில் அவதரித்த நாயன்மார்களின் திருநட்சத்திரத்தில் வழிபாடு செய்வதை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.