Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் புத்தாண்டு தரிசனம் ... பழநியில் குவிந்த பக்தர்கள்: ஐந்து மணி நேரம் காத்திருப்பு பழநியில் குவிந்த பக்தர்கள்: ஐந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் விசிறி வீசும் மதுரை பக்தர்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் விசிறி வீசும் மதுரை பக்தர்

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
11:01

சபரிமலை: சபரிமலையில் மயில் இறகுகளால் ஆன விசிறி வீசி பக்தர்களின் களைப்பு போக்கி வருகிறார் மதுரை பக்தர்.பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு போன்ற செங்குத்தான ஏற்றம் கடந்து பல மணி நேரம் வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். பகலில் வரிசையில் நிற்கும் பக்தர்கள் வெப்பத்தால் சிரமப்படுகின்றனர். இந்த பக்தர்களுக்கு உதவ மயில் இறகுகளால் ஆன விசிறியால் வீசி சேவை செய்து வருகிறார் மதுரை பக்தர்.மதுரை லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். கடந்த 21 ஆண்டுகளாக சபரிமலை வரும் இவர் பக்தர்கள் படும் சிரமத்தை பார்த்து இந்த ஆண்டு மயில் இறகுகளால் ஆன பெரிய விசிறியுடன் வந்தார். சிறு குழந்தைகளும்,முதியவர்களும் வெப்பத்தால் சிரமப்படும் போது அவர்கள் அருகில் சென்று விசிறியால் வீசிக் கொடுக்கிறார். இது பக்தர்களுக்கு சற்று ஆறுதலை கொடுக்கிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவ்வாறு பக்தர்களுக்கு வீசி கொடுக்கும் இவர், முதன் முறையாக சபரிமலையில் பக்தர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ளார். புத்தாண்டு தினத்தில் ஐயப்பனை தரிசிக்க சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கற்பூர தீபம் ஏற்றி பக்தர்கள் புத்தாண்டை வரவேற்றனர்.சபரிமலையில் பணிபுரியும் ஊழியர்கள் கற்பூர தீபம் ஏந்தி மரக்கூட்டம் வரை சென்று பக்தர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். 18-ம் படிக்கு கீழ் பகுதியில் 2017-ஐ வரவேற்கும் வகையில் கற்பூர தீபம் ஏற்றப்பட்டிருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஸ்ரீ வாரி கோவிலில் சாஸ்திர முறைப்படி இன்று வருடாந்திர சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 21.5 சவரன் தங்க கிரீடம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar