Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி உற்சவம் பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
தேனி சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

பதிவு செய்த நாள்

12 ஜன
2017
11:01

தேனி:  மாவட்டத்தின் பல்வேறு பகுதி சிவன் கோயில்களில் நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது.  தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடந்தது. அரண்மனைபுதுார் தட்சிணாமூர்த்தி கோயிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.   உத்தமபாளையம்: காளாத்தீஸ்வரர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு அதிகாலையில் சிவகாமி உடனுறை நடராஜர், மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஆருத்ரா, சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. சுவாமி வீதி உலா வந்தார்.கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

பெரியகுளம்: பெரியகுளம் கம்பம்ரோடு காளியம்மன் கோயிலில், ஆருத்ரா தரிசனம், கூடாரை வல்லியை முன்னிட்டு பூஜைகள் நடந்தன. சிவனுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உட்பட 18 வகையான அபிஷேகம், சிவனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், காளியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஸ்ரீ குருதட்சிணாமூர்த்தி சேவா சங்கம் ஆலோசகர் சரவணன், நிர்வாகிகள் செய்தனர்.

* பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், கைலாசபட்டி, கைலாசநாதர் கோயிலில் சிவனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.  கூடலுார்: கூடலுார் சீலைய சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி  சுவாமி நடராஜர், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அலங்காரம் , ஆராதனை நடந்தது. மகளிர் குழுவினர் நடராஜர் குறித்த பஜனை பாடல்கள் பாடினர்.

போடி:  ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிவனுக்கு 5 முகம் கொண்ட 10 ஆயிரத்தி 8 ருத்ராட்சம் கொண்டு ருத்ராட்ச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

* போடி அருகே பிச்சாங்கரை ஸ்ரீ கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 
temple news
சிவன் தன் தலையின் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar