நடுவீரப்பட்டு: கடலுார் அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை தெப்பல் திருவிழா நடந்தது. காணும்பொங்கலையொட்டி, நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தேவசேனா சுப்ரமணியர் மயில் வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று (17ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு கோவிலின் எதிரில் உள்ள குளத்தில் விநாயகர் தெப்பல் உற்சவம் நடந்தது. உற்சவத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.