தென்பெண்ணை ஆற்றில் தி.மலை அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2017 11:01
திருக்கோவிலூர்: மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆண்டு தோறும், தென்பெண்ணையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இதனையடுத்து இந்தாண்டு, திருவண்ணாமலையில் இருந்து அண்ணாமலையார் புறப்பட்டு, பாதம்தாங்கிகளில், மணலூர்பேட்டையை வந்தடைந்தார். விநாயகர், அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் அண்ணாமலையாரை வரவேற்று, தென்பெண்ணை நதிக்கு அழைத்துச் செல்லும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து தீர்த்தவாரி முடிந்து சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.