Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்பெண்ணை ஆற்றில் தி.மலை ... கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச வைபவம் கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் நெய் அபிஷேகம் நிறைவு : நாளை நடை அடைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2017
11:01

சபரிமலை: சபரிமலையில் நெய் அபிஷேகம் நேற்று காலை நிறைவு பெற்றது. இன்று இரவு 10:00 மணிக்கு மாளிகைபுறத்தில் குருதிபூஜை நடக்கிறது. நாளை காலை நடை அடைக்கப்படும்.மண்டல- மகரவிளக்கு காலத்தில் 60 நாட்களாக நடந்த வந்த நெய் அபிஷேகம் நேற்று காலை 10:௩0 மணிக்கு நிறைவு பெற்றது.

Default Image
Next News

பின் கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டன. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு களப பூஜை நடத்தினார். பிரம்மகலசம் பூஜித்து அதில் களபம் நிறைக்கப்பட்டு, மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி எடுத்து கோயிலை வலம் வந்தார். பின்னர் ஐயப்பன் விக்ரகத்தில் களபம் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சபூஜை நடைபெற்றது.நேற்று இரவு 9 மணிக்கு சரங்குத்தி வரை சென்ற மாளிகைப்புறத்தம்மன் பவனி பின்னர் கோயிலுக்கு திரும்பியது. இன்று அதிகாலை ௪:௦௦ மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடந்தாலும், நெய் அபிஷேகம் கிடையாது. இன்று வரும் பக்தர்கள் நெய்யை கோயிலில் கொடுத்து விட்டு அபிஷேகம் செய்த நெய் பிரசாதமாக பெற்று செல்லலாம்.இரவு 10:௦௦ மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடக்கிறது. அதன் பின்னர் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது.நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்த பின்னர் 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் கோயில் நடை அடைத்ததும் திருவாபரணங்கள் பந்தளத்துக்கு புறப்படும்.மண்டல மகரவிளக்கு காலத்தில் பம்பையில் இருந்து பஸ் சேவை நடத்தியதன் மூலம் கேரள அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு 13.20 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.மகரவிளக்கு காலத்தில் 4.42 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 80 லட்சம் ரூபாய் அதிகம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar